சென்னை:
மிழ்நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன என்று வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு பெருமிதம் தெரிவித்துள்ளார்.

காடுகளின் காவலன் என அழைக்கப்படும் புலி, நம் நாட்டின் தேசிய வனவிலங்கு ஆகும். உலக அளவில் புலிகளின் எண்ணிக்கை குறைந்து வந்ததைத் தொடர்ந்து, புலிகளை பாதுகாக்கும் நோக்கில் ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் புலிகள் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த ஆண்டில் இருந்து புலிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

புலிகளை பாதுகாப்பதன் மூலம் வனவளத்தை பாதுகாக்க முடியும். அது பல்லுயிர் பெருக்கத்துக்குப் பெரிதும் உதவும். 5 ஆண்டுகளுக்கு முன்பு அழிவின் விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை அண்மையில் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழக வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளார். இதன்படி 2018ம் ஆண்டு 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 306 ஆக உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதன்படி 2006-ஆம் 76, 2010-ம் ஆண்டு 163, 2014-ம் ஆண்டு 229 புலிகள் தமிழகத்தில் இருந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.