டில்லி:

நாட்டு மக்களிடையே அதிகரித்து வரும் செல்ஃபி மோகம் ஏற்கனவே பலரை பலிகொண்டு வரும் வேளையில், டில்லியில் ரயில்  தண்டவாளத்தில் நின்று செல்ஃபி எடுத்த 3 இளைஞர்கள்  ரயில் மோதி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்தவர்கள் நண்பர்கள்  சாமன், கி‌ஷண், சன்னி  ஆகியோர் தங்கள் உறவினர் ஒருவர் திருமணத்திற்காக தலைநகர் டெல்லிக்கு சென்றிருந்தனர். அங்கு பிரபல இடங்களில் நின்று செல்ஃபி எடுத்த நிலையில், பானிபட் பூங்கா பகுதியில்  உள்ள ரயில் தண்டவாளத்தில் நின்று வந்துகொண்டிருந்த ரெயிலை கவர் செய்து செல்பி எடுத்தனர். அப்போது வேகமாக வந்த ரெயில்  அவர்கள்மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்களது உடல் துண்டு துண்டாக சிதறியது.

இதுகுறித்து தகவல் அறிந்த  ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.