புதுடெல்லி:
சீனா உளவுத்துறைக்கு தகவல் அனுப்பியதாக டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியை சேர்ந்த ராஜீவ் சர்மா, சீனாவை சேர்ந்த ஒரு பெண் மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்சினை நிலவி வரும் சூழலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.