சென்னை

ந்த மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும் என மனோன்மணீயம்  சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்து விட்டு பட்டம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இங்குப் பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் கூட பட்டம் பெறமுடியாத சூழல் நிலவுகிறது.

மேலும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை எனப் புகார் எழுந்தது.

கடந்த 2021 டிசம்பர் மாதம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாகப் பட்டமளிப்பு விழா நடைபெற்று இருந்தது. அதன் பிறகு லட்சக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற முடியாத நிலையில், பட்டமளிப்பு விழா நடத்தக் கோரிக்கை வைக்கப்பட்டது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் இம்மாத இறுதிக்குள் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.  இது மாணவர்களுக்கு நிம்மதியையும் மகிழ்வையும் உண்டாக்கி இருக்கிறது.