திருவண்ணாமலை

நாளை காலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது.

உலகப் புகழ் பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் உள்ளது. பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக இந்தக் கோவில் விளங்குகிறது. மலையையே இந்த திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடப்படுகிறது.

எனவே அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி நாளை (புதன்கிழமை) வருகிறது. எனவே 30-ந் தேதி காலை 10.58 மணிக்குக் கிரிவலம் தொடங்கி மறுநாள் 31-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பவுர்ணமியையொட்டி வருகிற 30-ந் தேதி சென்னையிலிருந்து 250 பேருந்துகளும், பெங்களூரு மற்றும் சேலம் மார்க்கத்திலிருந்து 50 பேருந்துகளும், வேலூர் மற்றும் ஆரணி மார்க்கத்தில் 50 பேருந்துகளும் என 350 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலை மண்டலம் மூலம் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.