திருவண்ணாமலை

நாளை மாலை திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது,

உலகப் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இது பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ஸ்தலமாகும். இந்த திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடப்படுகிறது.

எனவே அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தைக் கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதம் பவுர்ணமி நாளை  மாலை 6.47 மணிக்கு தொடங்கி மறுநாள் 29-ந் தேதி  மாலை 4.34 மணிக்கு நிறைவடைகிறது. ஆகவே நாளை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இம்முறை பவுர்ணமி கிரிவலமானது விடுமுறை தினத்தையொட்டி வருவதால் ஏராளமான பக்தர்கள் வரலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும் பணியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.