வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசாமி கோயிலில் இருந்து சுமார் 100 கிராம் தங்கம் திருடப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
கோயிலில் தங்க முலாம் பூசும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த 12 பவுன் (தோராயமாக 96 கிராம்) தங்கம் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்க திருடர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கடைசியாக தங்க முலாம் பூசும் வேலை 2 நாட்களுக்கு முன்பு செய்யப்பட்டது, அதன் பிறகு மீதமுள்ள தங்கம் ஒரு லாக்கரில் பத்திரப்படுத்தப்பட்டது.
ஆனால் வேலைக்காக மீண்டும் தங்கத்தை லாக்கரிலிருந்து வெளியே எடுத்தபோது, சுமார் 12 பவுன் தங்கம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கோயில் அதிகாரிகள் புகார் அளித்ததாக கோட்டை காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.