யநாடு, காந்தி நகர்

க்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 117 தொகுதிகளில் இன்று காலை தொடங்கி உள்ளது.

நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் முதல் இரு கட்ட வாக்குப்பதிவுகள் ஏப்ரல் 11 மற்றும் 18 தேதிகளில் முடிவடைந்தன. இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுகள் தொடங்கி உள்ளது.   இந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் நடைபெற்று வருகின்றனர்.

இன்று காலை முதல் கேரளா (20 தொகுதிகள்), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கர் (7), கர்நாடகம் (14), மகராஷ்டிரா (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1), நகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

இன்று குஜராத் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குபதிவு நடைபெறுகிறது. இன்றைய வாக்குப்பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதியும் இடம் பெற்றுள்ளன.