டில்லி

இந்த ஆண்டு உச்சநீதிமன்றம், 52191 வழக்குகளை முடித்து வைத்துள்ளது

உச்சநீதிமன்றத்தில் 2 023 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை மொத்தம் 49,191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  ஆனால் இந்த அண்டு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமான எண்ணிக்கையில் வழக்குகள் முடித்து வைபட்டுள்ளன.

அதாவது இந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 52,191 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றம் நவீனத் தொழில்நுட்பத்தை திறம்பட உபயோகித்ததன் மூலம் விரைவாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள முடிந்ததாக தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இணைய வழக்குப்பதிவு, காணொலி காட்சி மூலம் விசாரணை, டிஜிட்டல் ஆவணப்பதிவு ஆகியவற்றின் பயன்பாடு காரணமாக விரைவாக நீதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.