நீட் தேர்வு வினாத்தாள்கள், மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டிருந்ததைக் குறிப்பிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

இந்த வழக்கு பிறகு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. அங்கு விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு இன்று வெளியானது.

அதில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட உயர் நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.