நியூயார்க்:

அமெரிக்காவில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த தி ரிங்க்ளிங் ப்ரோஸ் என்ற சர்க்கஸ் நிறுவனம் நியூயார்க்கில் நடத்தவுள்ள இறுதி நிகழ்ச்சியுடன் பிரியாவிடை பெறுகிறது.

அமெரிக்காவில் மிகவும் பழமைவாய்ந்த தி ரிங்க்ளிங் ப்ரோஸ் சர்க்கஸ் நிறுவனம், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில், பல்வேறு விலங்குகளை கொண்டு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. யானைகளின் சாகசங்கள் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்றிருந்தது.

சமீபகாலமாக இந்த நிறுவன சர்க்கஸ் காட்சிகளுக்கு பார்வையாளர்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனால் நஷ்டத்தில் இயங்கி வந்தது.

இதனையடுத்து சர்க்கஸ் காட்சிகளை இந்த மாதத்துடன் முடித்துக்கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி அமெரிக்காவின் நியூயார்க்கின் லாங்க் ஐலாண்ட் தீவில் நாளை ( 21ம் தேதி) தனது கடைசி காட்சியை நடத்த தி ரிங்க்ளிங்
ப்ரோஸ் சர்க்கஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிறுவனம் உலகம் முழுவதும் 284 நகரங்களில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி தி ரிங்க்ளிங் ப்ரோஸ் சர்க்கஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.