தென்காசி: ஓடும் பஸ்சின் அச்சு முறிந்து பேருந்தின் பின்பக்க டயர்கள் தனியே கழன்று ஓடியது. இதனால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தின் பின்பகுதியில் பயணம் செய்த  3 மாணவர்கள் காயம் அடைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  அரசு பேருந்துகளின் அவலம்  பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இன்று காலை, அரசு பேருந்தானது, சாலை ஒடிக்கொண்டிருக்கும்போதே, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த  நிலையில்,  பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது. இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.  இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை வழக்கம்போல, மதுரையில் இருந்து குற்றாலம் நோக்கி  சென்று கொண்டிருந்த அரசு பேருந்து,   தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் அருகே இடைகால் பகுதியில் உள்ள மதுரை-தென்காசி தேசிய நெடுஞ்சாலை சென்றபோது திடீரென பஸ் சக்கரத்தின் அச்சு முறிந்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் பின்பாகம் சாலையில் இழுத்துக்கொண்டே சென்றது.  பஸ்சின் பின் பக்கத்தில் உள்ள 2 சக்கரங்களும் தனியாக கழன்று சாலையில் ஓடியது. எனவே பஸ்சின் பின்பக்கம் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் உள்பட பஸ்சில் இருந்த 40 பயணிகளும் பஸ்சின் உள்ளே தூக்கி வீசப்பட்டனர். இதில் பின்பகுதியில் இருந்த 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மாணவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் பாதுகாப்பாக மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தின்போது பின்னால் வேறு பஸ்கள் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பஸ்சின் சக்கரம் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்

தொடரும் அவலநிலை: ஆடிக்காற்றில் அரசு பேருந்தின் டாப் கழன்று விழுந்து அதிர்ச்சி! இது பழனி சம்பவம்…