டெல்லி: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மறைவு துரதிருஷ்டவசமானது என காங்கிரஸ் கட்சியின் முன் னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த, பிரணாப் முகர்ஜிக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோமா நிலைக்கு சென்றார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை காலமானதாக ராணுவ மருத்துவமனை அறிவித்தது.

அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சித்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும்  இரங்கல்  தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜி மறைவுக்கு ராகுல்காந்தி  தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

அதில்,  நமது முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் துரதிர்ஷ்டவசமான மறைவு பற்றிய செய்தியை அறிந்த நாடு மிகுந்த சோகத்துடன் இருக்கிறது,  அவருக்கு அஞ்சலி செலுத்துவதில் நான் நாட்டு மக்களுடன் இணைகிறார். அவரது மறைவால், துயரமடைந்த அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.