புதுடெல்லி:
புதிய வேலைகளை வழங்குகிற திறன், மோடி அரசுக்கு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்குதல் தொடுத்துள்ளார்.

ரெயில்வேயில் மொத்தம் 91 ஆயிரம் பணியிடங்களை ரத்து செய்வது விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவிக்கையில், “புதிய வேலைகளை வழங்குகிற திறன், மோடி அரசுக்கு இல்லை என்றும், உங்கள் அராஜக அதிகாரத்தை இளைஞர்கள் உடைத்தெறிவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இளைஞர்களின் எதிர்காலத்தை அழிப்பதற்கு மோடி அரசு பெரும் இழப்புகளை சந்திக்கும்” என கூறி உள்ளார்.