ஸ்ரீஹரிகோட்டா: நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோவின் SSLV-D1 நாளை விண்ணில் பறக்க தயாராக உள்ளது. இஸ்ரோவின் பயணத்தில் இது மூன்றாவது ராக்கெட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ராக்கெட்டில் பள்ளி மாணவிகள் தயாரித்த AzaadiSat செயற்கைகோளும் செல்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (SDSC) திட்டமிடப்பட்டுள்ளது.  நாளை  (ஞாயிற்றுக்கிழமை) காலை 9:18 மணிக்கு (IST) விண்ணில் ஏவப்படுகிறது. இதை காண பொதுமக்களுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. இணையதளத்தில் பதிவு செய்து, அனுமதி பெற அறிவுறுத்தி உள்ளது.

இந்த புதிய SSLV ராக்கெட்டில் இந்தியா முழுவதும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட AzaadiSat என்ற செயற்கைகோள் கொண்டும், EOS 2 என்ற இந்தியாவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஒன்றையும் சேர்த்து விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இஸ்ரோவின் மிகச்சிறிய ஏவுகணை வாகனமான எஸ்எஸ்எல்வி டி-1 ஆனது, இந்தியா முழுவதும் உள்ள 75 கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து பெண் குழந்தைகள் குழுவால் 75 சிறிய மென்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இவை 8 கிலோ எடையுள்ள மைக்ரோசாட்லைட் ஆசாதி-சாட் செயற்கைக்கோளை சுமந்து செல்கிறது.குறிப்பாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிராமப்புற அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளால் சிறிய மென்பொருட்கள் அனைத்துமே உருவாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆசாதி சாட் எனப்படும் இந்த செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்றிருக்கின்றனர் என்பது தமிழ்நாட்டுக்கும், தமிழகஅரசுக்கும், கல்வித்துறைக்கும் பெருமையை சேர்த்துள்ளது.

சிறப்பம்சமாக அசாதிசாட் திட்டம், Space Kidz India என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பால் வடிவமைக்கப்பட்டது, இந்திய அரசின் நிதி ஆயோக் அமைப்புடன் இணைந்து,இளம் பெண்களை விண்வெளி ஆராய்ச்சியைத் தொழிலாகத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் முன்னெடுப்பாக இந்த SSLV D1 இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

SSLV ராக்கெட்:

இஸ்ரோ ஏற்கனவே  PSLV மற்றும் GSLV ஆகியவற்றுக்கு பிறகு இஸ்ரோவின் மூன்றாவjக SSLV என்ற பெயரில் ஏவுகணை வாகனம் தயாரித்து உள்ளது. இந்த புதிய ஏவுகணை வாகனமான SSLVயின் திட பூஸ்டர் நிலையின் SS1 தரை சோதனை கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி நடத்தப்பட்டது.

இந்த எஸ்எஸ்எல்சி (SSLV) ராக்கெட்  சிறிய செயற்கைக்கோள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கை கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான சந்தையை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.  SSLV – D1 120-டன் எடையுடன், மற்ற ராக்கெட் போல இல்லாமல் 72 மணிநேரத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. வழக்கமாக ஒரு ராக்கெட்டை வடிவமைக்க 60 பேர் வரை குறைந்தபட்சம் பணியாற்றும் நிலையில் இந்த ராக்கெட்டை வடிவமைக்க 6 பேர் போதுமானதாக உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது. அத்துடன், 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுப்பாதையில் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

 SSLV செயற்கைகோள் புவியின் பல்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்த உதவியாகவும் ஒரு நேரத்தில் பல மைக்ரோசாட்லைட்களை ஏவுவதற்கு மிகவும் பொருத்தமானதாகவும் வடிவமைக்கப்பட் இருப்பதாகவும், இதில், விண்வெளியில் சோலார் பேனல்களின் செயல்திறனை ஆய்வு செய்ய அசாதிசாட்டில் செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளதுடன், சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தையும் இது ஆய்வு செய்யும் என்றும் இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த ராக்கெட் நாளை முதன்முறையாக விண்ணில் ஏவப்படுகிறது.

இஸ்ரோ வரலாற்றில் PSLV, GSLV வரிசையில் மூன்றாவது ராக்கெடாக முதன்முதலாக நாளை காலை 9.18மணியளவில் விண்ணில் ஏவ ஏவப்படும் செயற்கைக்கோள் 13.3 நிமிடங்களுக்குப் பிறகு, பூமியிலிருந்து சுமார் 356 கிமீ உயரத்தில் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.