சென்னை:

யர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, எம்ஐடி, என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் கல்வி படிக்க நடத்தப் படும் நுழைவுத்தேர்வான ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காச அவகாசம் 10ந்தேதியுடன் முடி வடைந்தது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து 10லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகள்  ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு, ஜேஇஇ பிரதானத் தேர்வு என இரு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முதல்நிலை தேர்வானது தேசிய தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டு தோறும் ஜனவரி, ஏப்ரல் ஆகிய மாதங்களில் 2 முறை நடத்தப்பட உள்ளது.

நடப்பாண்டு ஜேஇஇ தேர்வு நாடு முழுவமும்  ஜனவரி 6 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த செப்டம்பர் 3-ல் தொடங்கி அக் டோபர் 10-ம் தேதியுடன் முடி வடைந்தது.

நடப்பாண்டு சுமார் 10.2 லட்சம் மாணவர் கள் தேர்வுக்கு விண்ணப்பித் துள்ளதாக தேசி தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. பதிவு செய்துள்ள விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால், அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை திருத்தங்களை மேற் கொள்ளலாம் என்றும்,   http://nta.ac.in என்ற இணைய தளம் வழியாக திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றம் கூறி உள்ளது.

இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்களுக்கான ஹால் டிக்கெட் டிச.6-ந்தேதி முதல் http://nta.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது,.

தேர்வு முடிவுகள் 2020ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேவேளையில் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு விண்ணப்பம் குறித்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தோராயமாக 2020ம் ஆண்டு மே மாதத்தில் தேர்வு நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் கருதப்படுகிறது.