சென்னை:
அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் சசிகலா பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் நான் தலைமை ஏற்றதும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு நல்ல பதவிகள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விரைவில் அதிமுக கொடியையும் கட்சியையும் கைப்பற்றுவோம் என்று உறுதியாக தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel