ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  ஆறு போலீசார் மரணம் அடைந்தனர். அவர்களது முகங்களை, துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் சிதைத்துள்ளனர்.  இந்த சம்பவத்திற்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

காஷ்மீரில் இந்தியா-பாக்.சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் ஒப்பந்தத்தை  மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதும், காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

காஷ்மீரின் ஆனந்தநாக் மாவட்டத்தில் தஹாஜிவாரா என்ற பகுதியில் போலீஸ் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று (ஜூன் 16) பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 6 போலீசார்  மரணம் அடைந்தனர். பொதுமக்கள் இரண்டு பேர் காயமடைந்தனர்.

பலியான காவல்துறையினர் முகத்தை துப்பாக்கியால் சுட்டு சிதைத்துவிட்டு பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர்.