அசாமில் தீவிரவாதிகள் தாக்தகுலில் 12 பொதுமக்கள்  இறந்துள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் 20 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
அசாமில் உள்ள கோக்ராஜ்கர்  மாவட்டத்தில்  உள்ள மார்கெட்டில்  இன்று நண்பகல் நேரத்தில்  இந்த தாக்குதல்  நடைபெற்றுள்ளது.
சம்பவ இடத்துக்கு பாதுகாப்பு படையினரும், போலீசாரும் விரைந்து வந்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதி (வட்டமிடப்பட்டுள்ளது)
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதி (வட்டமிடப்பட்டுள்ளது)