ஸ்பெயின் மற்றும் பின்லாந்த் நாடுகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று பார்சிலோனா. இந்நகரின் மையப்பகுதியில் உள்ள லாஸ் ராம்பலாஸ் என்ற சுற்றுலா தலத்தில் மக்கள் அதிக அளவில் கூடி இருந்தனர். இந்நிலையில் திடீரென ம க்கள் கூட்டத்தில் வேன் ஒன்று புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.

எனினும் வேன் மோதியதில் 13 பேர் இறந்தனர். 100 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. வாகன தாக்குதல் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். எனினும், வேனை ஓட்டிவந்தவன் பிடிபடவில்லை. இந்த தாக்குதலை அடுத்து நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 1 பயங்கரவாதி காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

                                            பின்லாந்தில் அடுத்த தாக்குதல்

பின்லாந்து நாட்டின் துர்கு நகரில் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்தியதில் 2 பேர் இறந்தனர். அ ந்த நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

தலைநகர் ஹெல்சின்கியிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவிலுள்ள துர்கு நகரில் இந்த சம்பவம் நட ந்துள்ளது. பெரிய கத்தியை வைத்திருந்த ஒருவர் சரமாரியாக மக்களை குத்தினான். இதில் 2 பேர் இற ந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

இதனால் பீதியடைந்த மக்கள் அங்குமிங்கும் தலைதெறிக்க ஓடினர். தகவலறிந்த போலீசார் விரைந்து வ ந்து, கத்தியோடு ஓடிய நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். குண்டு பாய்ந்து அந்த நபர் விழுந்தார். அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவனிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர் சரமாரியாக கத்தியால் குத்தியதால், துர்கு நகரின் மைய பகுதியில் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. இது தீவிரவாத செயலா என்பது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது. இதற்கும் பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு இரு க்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், நகரில் இவனை போன்று வேறு யாரும் ஊ டுறுவி இருக்கிறார்களா என போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்பெயின் நடந்த தாக்குதலை தொடர்ந்து பின்லாந்திலும் தாக்குதல் நடந்துள்ளது. இந்த இரு சம்பவங்களு க்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதில் மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.