ண்டன்

ண்டன் நகருக்கு சென்ற விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவர் தற்கொலை செய்துக் கொள்ள முயன்றுள்ளார். 

பி.ஆர்.67 என்ற எண் கொண்ட தனியார் விமானம் ஒன்று பாங்காக் நகரில் இருந்து லண்டன் நகர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் கழிவறைக்குச் சென்று, உட்புறம் கதவைப் பூட்டிக் கொண்டு நெடுநேரம் திரும்பி வரவேயில்லை.

இதையொட்டி விமானத்தின் ஊழியர் ஒருவர் சென்று பார்த்தபோது, காயங்களுடன் அந்த பயணி கிடந்துள்ளார். அந்த ஊழியர் உடனடியாக விமானத்தில் இருந்த மருத்துவர் உதவியுடன்,அந்த பயணிக்கு முதலுதவி செய்தார். அவசர நடவடிக்கையாக, அந்த விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 17 நிமிடங்கள் முன்பாக லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் சென்றிறங்கியது.

விசாராஇயில் அந்நபர் கழிவறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட.அந்தப் பயணியின் பெயர் மற்றும் அவருடைய அடையாளம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.