சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு பதாகை அகற்றலால் பதட்டம் ஏற்பட்டது.

நாளைக் காலை சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது.  இதற்காக ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் நகருக்கு வந்துள்ளனர்.  இங்குள்ள நடராஜர் கோவிலில் கனகசபையில் நடனமாடும் சிவபெருமானைக் காணச் சாதாரண நாட்களிலேயே அதிக அளவில் பக்தர்கள் கூடுவார்கள்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் 4 நாட்களுக்குக் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என அறிவிப்பு பதாகைஅயி திடீரென வைத்துள்ளனர்.   இது பக்தர்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.   பலரும் இது குறித்து புகார் எழுப்பினர்.

 ஆலய அதிகாரிகள் பக்தர்களின் புகாருக்கிணங்க முன்னறிவிப்பின்றி தீட்சிதர்களால் வைக்கப்பட்ட பதாகையை அகற்ற முயன்றுள்ளனர்.  இதை எதிர்த்த தீட்சிதர்கள் அதிகாரிகளைத் தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அங்குப் பதட்டம் நிலவுகிறது.

 சிதம்பரம் கோவிலில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் இந்த பிரச்சினை எழுந்துள்ளது பக்தர்கள் மனதில் கவலையை உண்டாக்கி உள்ளது.