திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நிலவி வரும் பல்வேறு ரச்சினைகள் காரணமாக, கேரள முதல்வருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. செய்தி யாளர்களின் கேள்விக்கணைகளால், முதல்வர் டென்சனாகி செய்தியாளர்களிடம் கோபப்படும் போக்கும் நீடித்து வருகிறது.

கேரளா மாநில அரசு, சமீபத்தில் தூதரகம் பெயரில் நடைபெற்ற தங்கக்கடத்தல, இயற்கை பேரிடர், கொரோனா பாதிப்பு  உள்பட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி சின்னாப்பின்னமாகி உள்ளது. தங்க்கடத்தல் வழக்கில், முதல்வரின் முதன்மை செயலாளர் சிவசங்கர் சிக்கி இருப்பது மாநில முதல்வருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த தங்கக்கடத்தல் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக என்ஐஏ விசாரணை தீவிரமாக நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் முதல்வர்மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வீசி வருகின்ற னர். மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவு, விமான விபத்து என அடுக்கடுக்கான பல்வேறு சேதங்களுயும், இன்னல்களும் தொடர்ந்து வருகிறது.

இந்த சூழலில்,  முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்திக்கும்போது டென்சனாக இருப்பதாகவும், கேள்வி எழுப்பும் செய்தியாளர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்து வருவதும் ஊடகவியலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Chief minister Pinarayi Vijayan during the press meet in connection with Covid 19 at Thiruvananthapuram on MondayÊphoto by: T K Deepaprasad

சமீபத்தில்,  பினராயியின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, கொரோனா மீண்டும் அதிகரித்து வருவது தொடர்பாக செய்தியளார் ஒருவர் கேட்ட கேள்வி, வார்த்தை போராக மாறிவிட்டன. அதுபோல,  திருவனந்தபுரத்தில் தங்கக் கடத்தல் வழக்கு, ஸ்பிரிங்கர் ஒப்பந்தம் உள்பட பல்வேறு சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் சரமாரி கேள்வி எழுப்புவதும், இதில் மாநில அரசின் பங்கு குறித்து கேள்வி எழுப்பியது முதல்வரிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ளன.

இதுமட்டுமின்றி ஏற்கனவே தங்கக் கடத்தல் வழக்கு  தொடர்பாக முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர் ஐ.ஏ.எஸ் மற்றும் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஸ்வப்னா சுரேஷுக்கும் உள்ள தொடர்பு குறித்து முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதுபோல ஸ்வப்னாவுடனான தனது சொந்த தொடர்பு குறித்து முதல்வரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது,

அதுபோல கடந்த சில  நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது,   ஸ்வப்னா தனக்கு முதல்வரைத்  தெரியும் என்று கூறியிருக்கிறாரோ, என்பது குறித்தும் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பினராயி விஜயன் கூறுகையில், “இதில் நான் தனியாக சொல்ல எதுவும் இல்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல என்.ஐ.ஏ இந்த வழக்கை விசாரிக்கட்டும். விசாரணைக்காக அவர்கள் எங்குவேண்டுமானாலும் செல்லட்டும். முதல்வர் அலுவலகத்துடன் தொடர்பு இருந்ததாக என்.ஐ.ஏ சொன்னதா? அல்லது பத்திரிகைள் சொன்னதா? முதல்வரை தெரியும் என அவர் சொன்னதாகக் கேட்கிறீர்கள், முதல்வரை உங்களுக்கு தெரியாதா. நான் இதற்கு பதிலளிக்க தேவையில்லை. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தங்கள் வேலையைச் செய்து உண்மைகளைக் கண்டறியட்டும், ”என்றார்.

“என்ஐஏ கூறியதை யாராவது தவறாகப் புரிந்துகொள்ள முயற்சித்திருக்கலாம் என்றவர், மாநில அரசு மீது குற்றச்சாட்டுக்கள் கூறுவதுதான்  ஊடக அமைப்புகளின் நோக்கம் என்று  குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்களுக்கும், செய்தி நிறுவனங்களுக்கும் என்ன வேண்டும்? தங்கம் கடத்தலுக்கு முதல்வர் கூட்டு நின்றார் என சொல்ல வேண்டுமா. இதைப்பற்றி மக்களுக்கு தெரியும்” “நீங்கள் தனி ரீதியை உருவாக்க முயல்கிறீர்கள். என்ன அடிப்படையில் கேரள முதல்வராக இருக்கும் என்னை சந்தேகிக்கும் வகையில் செய்தி கொடுக்கிறீர்கள். என்ன ஆதாரத்தின் அடிப்படையில் செய்தி கொடுக்கிறீர்கள். அரசியல் ரீதியாக என்னை தகர்க்கும் சக்திகளுடன் நீங்கள் நிற்கிறீர்களா? பத்திரிகை தர்மத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

“தங்கக் கடத்தலுக்கு கேரள முதல்வர் உதவினார் என்பதை அவர்கள் நிறுவ விரும்புகிறார்களா? உங்களுடைய நோக்கம்  என்ன என்பது குறித்து மக்கள் தெளிவாக தெரிந்து உள்ளனர்.

நீங்கள் பொதுக்கருத்தை மாற்ற முயற்சிக்கிறீர்கள், மேலும் ஊடகக் கூட்டாளராக மாறுகிறீர்கள். முதல்வரின் நாற்காலியை சந்தேகத்தின் மேகத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நீங்கள் எந்த அடிப்படையில் செய்தி தருகிறீர்கள்? ” அவர்  எதிர் கேள்வி எழுப்பினார்.

இருந்தாலும் செய்தியாளர்களின் கேள்விகள்  தொடர்ந்தபோது, ​​சில ஊடக நிறுவனங்கள், தன்னை அரசியல் ரீதியாக அழிக்க முயற்சிப்பதாக  குற்றம் சாட்டினார். அதுபத்திரிகை நெறிமுறைகள் அல்ல என்று கூறியவர்,  “இது ஒரு கடுமையான வழக்கு மற்றும் தீவிர விசாரணை இருக்க வேண்டும். உண்மை விரைவில் வெளிவரும், யாருடைய இதயத் துடிப்பு உயரும் என்பதை நாம் காணலாம். நானும் என் அலுவலகமும் மறைக்க எதுவும் இல்லை, ”என்றார்.

சில ஊடகங்கள், தனது  இடது ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டைக் கொண் டுள்ளன. “நீண்ட காலத்திற்கு முன்பு, கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் தங்களைக் கொன்று விடுவார்கள் என்று ஒருவர் சொன்னார்,” என்று அவர் ஒரு பழைய  தகவலை குறிப்பிட்டவர்,  அவர்கள் கூறுவது போல் ஊடகங்களுக்கு பாதிப்பில்லாத நோக்கங்கள் இருந்திருந் தால், முதல்வர் அலுவலகத்துடன் (சிவசங்கர் ஐ.ஏ.எஸ்) இணைக்கப்பட்ட அதிகாரிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையுடன் அவர்கள் நிறுத்தப்பட்டிருப்பார்கள் என்று முதல்வர் கூறினார்.

“ஆனால் நீங்கள் திருப்தியடையவில்லை – அல்லது மாறாக, உங்களை அனுப்பும் நபர்களுக்கு திருப்தி கிடைக்க நான் முதல்வரின் நாற்காலியை காலி செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் அதை தீர்மானிக்க மாட்டார்கள், மக்கள் செய்கிறார்கள், ”என்று அவர் கூறினார்.

அதுபோல கொரோனா பாதிப்பு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது,  கொரோனா  விவகாரத்தில், அரசின் நடவடிக்கை  அரசியல் போட்டிக்கான இடமில்லை என்றவர், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மற்ற அரசியல் கட்சிகளின் தொழிலாளர்களை குறைத்து மதிப்பிட அவர் விரும்பவில்லை,  என்றார்.

“உங்கள் எல்லா கேள்விகளுக்கும் நான் பதிலளிக்கிறேன்  ஆனால், நான் செய்தியாளர்களுக்கு பதில் தெரிவிக்காமல் ஓடிவிட்டேன் என்று நீங்கள் சொல்வீர்கள்!”  என்றார்.

இவ்வாறு இருக்க  கடந்த சனிக்கிழமையன்று அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்களிடம் இருந்து தங்கக்   கடத்தல் வழக்கில் தொடர்ச்சியான கேள்விகள் இருந்தன,

ஒரு பத்திரிகையாளர் அரசாங்கத்தின் செல்லப்பிராணி திட்டமான ‘லைஃப் மிஷன்’ ஐ ஏழைகளுக்கு வீடுகளை ஸ்வப்னாவுடன் கட்டியெழுப்பினார் (கனவு ஸ்வப்னம் என்ற மலையாள வார்த்தை).

லைஃப் மிஷனுக்கு பங்களித்த ஐக்கிய அரபு எமிரேட் தொண்டு நிறுவனமான ரெட் கிரசெண்டி லிருந்து ஒரு கோடி ரூபாயை கமிஷனாக ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளதே என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த  முதல்வர், ‘லைஃப் மிஷன்’   ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தொண்டு அமைப்பு என்றும், ஸ்வப்னா ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் என்றும், பணத்தை முறைகேடு செய்திருந்தால், அது விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், இந்த அமைப்புடன்  அரசு நிறுவனங்கள் ஏதும் தொடர்டபில்  இல்லை, என்றார். “இது தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நேரடியாக செய்யப்பட்டது,

இந்த விஷயத்தில், அரசாங்கம் செய்ததெல்லாம் அதற்கு இடம் கொடுப்பதுதான். இருப்பினும், ஏதேனும் முறைகேடு நடந்தால், நாங்கள் சிக்கலைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதுபோன்ற கேள்விகள் மீண்டும் மீண்டும் முதல்வரிடம் செய்தியாளர்களால் எழுப்பட்டதால், அவர் டென்சனாக தொடங்கினார். செய்தியாளர்களை பார்த்து,  “நீங்கள் இந்த விவகாரத்தை  வேறு திசையில் கொண்டு செல்ல விரும்புகிறீர்கள், அதனால்தான் அதே கேள்விகளை மீண்டும் கேட்கிறீர்கள் . நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை, ”என்று  கூறினார்.

தொடர்ந்து என்ஐஏ விசாரணை குறித்த கேவிக்கு,  விசாரணை அதன் வழியில் தொடரட்டும் என்றவர்,  விஷயங்களை அவர்களிடம் சுட்டிக்காட்டுவது, விசாரணை நிறுவனத்திடம் இந்த நபரை அழைக்குமாறு கேட்பது ஊடகத்தின் வேலை அல்ல என்று தெரிவித்த முதல்வர்,

உண்மையில்லாத குற்றச்சாட்டுக்களை  கூறுவது ஊடக நெறிமுறைகளின் ஒரு பகுதியா? என்ற கோபத்துடன் கேள்வி எழுப்பியவர், சில ஊடகங்களின் நிகழ்ச்சி நிரல் போல உள்ளது, இதன் பின்னணியில் சிலர் உள்ளனர் என்று கடுமையாக சாடினார்.

இதனால் முதல்வர் மட்டும் ஊடகவியலாளர் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.