நியூயார்க்:
நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் போட்டியின் இறுதிச் சுற்றில் சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் வீரர் ஸ்டேன் வாவ்ரிங்கா வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றினார்.
00
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற  செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச்சை அவர் 6-7, 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
நான்காவது செட் ஆட்டத்தின்போது ஜோக்கோவிச், காலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. அவரது பயிற்சியாளர் இரண்டு முறை வந்து, காயம்பட்ட  கால் விரலுக்கு சிகிச்சை அளித்தார்.
இந்த போட்டியில் வாங்ரிங்கா வென்றிருப்பது மூலம் கிராண்ட் சலாம் போட்டியில் மூன்றாவது முறையாக வென்றிருக்கிறார்.
முன்னதாக நடைபெற்ற அமெரிக்க ஓபன் மகளிர் டென்னிஸ் இறுதி போட்டியில் ஜெர்மனியின் அன்ஜெலீக் கெர்பரும்  செக் குடியரசை சேர்ந்த கரோலினா பிலீஸ்கோவாவும் மோதினர். இதில் அன்ஜெலீக் வெற்றி பெற்றார்.