மலப்புரம்:
கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் கால்பந்து போட்டி நடைபெற இருந்தது. இதற்காக அந்த மைதானத்தில் தற்காலிகமாக மூங்கில் மற்றும் மரப்பலகைகளால் ஆன கேலரி அமைக்கப்பட்டிருந்தது.

போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அந்த தற்காலிக கேலரி சரிந்து விழுந்திருக்கிறது. இதனால் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் படுகாயமடைந்தவர்களுக்கு மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், மற்றவர்கள் பூங்கோடு பகுதியை சுற்றியுள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருக்கிறார்கள். அப்போது மைதானத்தின் கிழக்கு திசையில் அளவுக்கு மீறி பாரம் கூடியதன் விளைவாக கேலரி சரிந்ததாகவும் அதன் காரணமாகவே விபத்து நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.