மங்களூர்:
கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்று அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என்று கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே உள்ள பாப்பநாடு துர்காபரமேஸ்வரி கோயில் அருகே காணப்பட்ட வைக்கப்பட்டுள்ள பேனரில், கோயிலின் வருடாந்திர திருவிழாவில் முஸ்லிம்கள் தங்கள் கடைகளை வைக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மறுப்பு தெரிவித்த கோவில் நிர்வாகத்தினர், அப்படி ஒரு பேனரை தாங்கள் வைக்கவில்லை என்றும், யாரோ அதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வராமல் வைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.