திருமலா:
தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது.

தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையடுத்து திருப்பதி எழுமலையானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் நடைபெற்றன.

இன்று தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்கு விநியோகிக்க கூடுதலாக லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.