ஐதராபாத்
அமலாக்கத்துறையால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார்.

டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தொடர்புள்ளதாகத் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மீது புகார் எழுந்தது. எனவே ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. சோதனை முடிவில் பாரதிய ராஷ்ட்ரீயச் சமிதி கட்சி ஆந்திர மேலவை உறுப்பினரான கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் அவர் விசாரணைக்காக டில்லி அழைத்துச் செல்லப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கவிதாவின் கைது நடவடிக்கையைக் கண்டித்து தெலுங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரீயச் சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில், கவிதா கைது செய்யப்பட்டு இருப்பது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
[youtube-feed feed=1]