ஐதராபாத்:

திருப்பதி ஏழுமலையான் கோயில் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் பேரில் கனிமொழி மீது 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்ய தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனிமொழி மீது பா.ஜ.க மாவட்ட தலைவர் பெத்தி மகேந்தர் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். இந்த மனுவை ஏற்ற கரீம் நகர் மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இது குறித்து தெலுங்கானா திரிடவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது.