சென்னை:
விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்தியில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 9,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணம் செய்துள்ள நிலையில், நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.