திருமலை திருப்பதியில் டீ குடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்பின் மீது ஆங்கிலத்தில் டீ என்று அச்சிடப்பட்ட எழுத்து சிலுவை போன்று இருந்ததால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது.

திருமலையில் இந்து மதம் தவிர பிற மத அடையாளங்களைக் கொண்டுவர அனுமதி இல்லாத நிலையில் டீ கப்பில் சிலுவைச் சின்னம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து சிலுவை போட்ட கப்பில் டீ வழங்கிய அந்த கடைக்கு தேவஸ்தான அதிகாரிகள் சீல் வைத்தனர்.