டெல்லி: பிலமான டாடா நிறுவனம், கொரோனா சோதனை குறித்து கண்டுபிடித்துள்ள சிஆர்ஐஎஸ்பிஆர்  பரிசோதனைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கி உள்ளது. இந்த சோதனைக்கு குறைந்த அளவே கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

டாடா குழுமம் டெல்லியில் இருக்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து, குறைந்த செலவில் கொரோனா தொற்று குறித்து கண்டறியும்,   சிஆர்ஐஎஸ்பிஆர் (CRISPR)  பரிசோதனைக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம்,  அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க   RT-PCR, ரேபிட் டெஸ்ட், ஆன்ட்டிபாடி டெஸ்ட் என பல்வேறு வகையான சோதனைகள் செய்யப்படுகின்றன. முன்னதாக, உடனைடியாக கொரோனா தொற்று குறித்து கண்டுபிடிக்க  ரேபிட் கிட் சோதனை நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான சோதனை முடிவுகள் தவறாக வந்தால், அந்த வகையிலான சோதனைக்க முடிவுரை எழுதப்பட்டது.

அதைத்தொடர்ந்து,  துல்லிமான சோதனை முடிவுகளுக்கு  RT-PCR டெஸ்டுக்கு பரிந்துரைக்கப் பட்டது. இந்த வகையிலான அதிக செலவாகும் பிடிக்கிறது. இதனால், இதை அனைத்து பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், குறைந்த செலவில் துல்லியமான முடிவை வழங்கும் கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் டாடா நிறுவனம்  இறங்கியிருந்தது. டாடா குழுமமும் டெல்லியில் இருக்கும் CSIR-IGIB நிறுவனமும் இணைந்து CRISPR கோவிட்-19 பரிசோதனை முறையை கண்டுபிடித்துள்ளது. இந்த சோதனை முறைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது.

இந்த சோதனை மூலம்,  கொரோனா வைரஸின் மேற்புறத்தில் இருக்கும் Cas9 protein என்பதை துல்லியமாக கண்டறிந்து பாதிப்பை உறுதி படுத்த முடியும் என்றும் RT-PCR பரிசோதனையை விட குறைவான செலவே ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த முறையை பயன்படுத்தி வருங்காலத்தில் வேறொரு வைரஸ் பரவினாலும் கண்டறிய இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.