டெல்லி: பிரதமர் மோடியின் ஆலோசகராகபெட்ரோலியத் துறை முன்னாள் செயலர் தருண் கபூர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் 2 ஆண்டுகள் இந்த பதவியில் நீடிப்பார்.

பிரதமர் மோடியின் ஆலோசகராக பெட்ரோலியத்துறை முன்னாள் செயலாளர் தருண் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன்  பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளர்களாக மூத்த அதிகாரிகளான ஹரி ரஞ்சன் ராவ் மற்றும் அதிஷ் சந்திரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

“அமைச்சரவையின் நியமனக் குழு, கபூரை பிரதமரின் ஆலோசகராக, பிரதமர் அலுவலகத்தில் (PMO), இந்திய அரசாங்கத்தின் செயலாளர் பதவி மற்றும் அளவில், தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது. சேரும் தேதி” என்று பணியாளர் அமைச்சக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மூத்த அதிகாரிகளான ஹரி ரஞ்சன் ராவ் மற்றும் அதிஷ் சந்திரா ஆகியோர் பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) கூடுதல் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சரவை நியமன குழு அறிக்கை தெரிவித்து உள்ளது.

 தருண் கபூர்  கடந்த 1987-ம் ஆண்டு இமாச்சல பிரதேச பிரிவிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானவர் தருண் கபூர். பல்வேறு பதவிகளை வகித்த இவர் கடைசியாக மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் பணியிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். பணியில் சேர்ந்தது முதல் 2 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார். இவருக்கு மத்திய அரசுத் துறை செயலாளருக்கு இணையான அந்தஸ்து மற்றும் சம்பளம் வழங்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுபோல ஹரி ரஞ்சன் ராவ் மற்றும் ஆதிஷ் சந்திரா ஆகியோர் பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் செயலாளர்களாக நியமிக்கப்பட் டுள்ளனர். 1994-ல் மத்திய பிரதேச பிரிவிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான ஹரி ரஞ்சன் ராவ், தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.

1994-ல் பிஹாரிலிருந்து தேர்வான ஆதிஷ் சந்திரா, இந்தியஉணவுக் கழகத்தின் தலைவர்மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.