சென்னை: சனி, ஞாயிறு விடுமுறைகளையொட்டி பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது.

சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பணியாற்றி வருபவர்கள் விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த நிலையில், சமீக காலமாக சனி,  ஞாயிறு உள்பட தொடர் விடுமுறை நாட்களின்போதும் வெளியூர் பயணிகளின் வசதிக்காக  சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் சனி ஞாயிறு விடுமுறை எனபதாலும், நாளை முகரம் பண்டிகை வருவதாலும், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

அதன்படி, இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும், சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாகவும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.