இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராத் கோலியின் தலைமையிலான இந்திய அணி, மோசமாக தோற்றாலும், இந்திய அணியில் இடம்பெற்ற 2 தமிழக வீரர்களின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்தன.

அதுவும் ரவிச்சந்திரன் அஸ்வினின் செயல்பாடுகள் இரண்டு இன்னிங்ஸ்களிலும் பிரமாதம்! இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அஸ்வின், பேட்டிங்கின்போதும், மிக முக்கியமான கட்டத்தில் நிலைத்து நின்று 31 ரன்களை அடித்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச்சில் பிரமாதப்படுத்தியவர் 6 விக்கெட்டுகளை அள்ளி, இங்கிலாந்தை 178 ரன்களுக்குள் சுருட்ட உதவினார்.

வாஷிங்டன் சுந்தரை எடுத்துக்கொண்டால், முதல் இன்னிங்ஸில், 85 ரன்களை விளாசி, கடைசிவரை அவுட்டாகாமல் இருந்து, இந்திய அணியின் ஸ்கோர் 300க்குமேல் ஏற உதவினார். இவருக்கு சரியான ஒத்துழைப்பு கிடைத்திருந்தால், சதம் அடித்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

ஆக, சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில், வாய்ப்பு பெற்ற இரண்டு சென்னை வீரர்களுமே, அணிக்கு தங்களால் இயன்ற சிறந்த பங்களிப்பை செய்துள்ளனர்.