சென்னை,

மிழ் அறிஞர்கள் 52 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ் அறிஞர்கள் 52 பேருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருதுகள் வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், 2016ஆம் ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு. போப் விருது, உமறுப்புலவர் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகளையும், 2015ஆம் ஆண்டுக்கான முதல்- அமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகளையும் சேர்த்து 52 விருதுகளை விருதாளர்களுக்கு வழங்கினார்.

2016ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதிற்கு மாணவர் மன்றம் தமிழ் அமைப்பு தெரிவு செய்யப்பட்டு, விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, கேடயம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை அந்த மன்றத்தின் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது.

கபிலர் விருதை இல.க. அக்னிபுத்திரன், உ.வே.சா. விருதை முதுமுனைவர் ம.அ.வேங்கடகிருஷ்ணன், கம்பர் விருதை இலங்கை ஜெயராஜ், சொல்லின் செல்வர் விருதை மணிகண்டன், ஜி.யு.போப் விருதை வைதேகி ஹெர்பார்ட் சார்பாக ஆறுமுகம், உமறுப்புலவர் விருதை தி.மு.அப்துல் காதர்; இளங்கோவடிகள் விருதை நா.நஞ்சுண்டன், அம்மா இலக்கிய விருதை ஹம்சா தனகோபால் ஆகியோர் பெற்றனர்.

இவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்பட்டது.

2016ஆம் ஆண்டிற்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள் நாகலட்சுமி சண்முகம், அ.ஜாகிர் உசேன், அல்லா பிச்சை (எ) முகம்மது பரிஸ்டா, உமா பாலு, கா.செல்லப்பன், வி.சைதன்யா, முருகேசன், கு.பாலசுப்பிரமணியன், ச.ஆறுமுகம் பிள்ளை, கே.எஸ்.சுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

2015ஆம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது செ.முரளி (எ) செல்வ முரளிக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவற்றுடன் வழங்கப்பட்டது.

2015ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுகள் வேம்பத்தூர் (எம்) கிருஷ்ணன் (சென்னை மாவட்டம்), மா.கி.ரமணன் (திருவள்ளூர் மாவட்டம்), கூ.மு.துரை (எ) கவிஞர் கூரம் துரை (காஞ்சிபுரம் மாவட்டம்), வி.பத்மநாபன் (எ) புலவர் வே. பதுமனார் (வேலூர் மாவட்டம்), ந.நாகராசன் (கிருஷ்ணகிரி மாவட்டம்), பா.இந்திரராசன் (திருவண்ணாமலை மாவட்டம்), கவிஞர் பெ.ஆராவ முதன் (விழுப்புரம் மாவட்டம்), முனைவர் அரங்க. பாரி (கடலூர் மாவட்டம்), செ.சுந்தரம் (எ) வெண்பாவூர் செ.சுந்தரம் (பெரம்பலூர் மாவட்டம்), ம.சோ.விக்டர் (அரியலூர் மாவட்டம்), கவிஞர் பி. வேலுசாமி (சேலம் மாவட்டம்), தகடூர். வனப்பிரியனார் (எ) கா.இராமசந்திரன் (தருமபுரி மாவட்டம்), புலவர் மா.சின்னு (நாமக்கல் மாவட்டம்), முனைவர் ச.சந்திரகுமாரி (ஈரோடு மாவட்டம்), ச.வரதசிகாமணி (கரூர் மாவட்டம்), முனைவர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் (கோயம்புத்தூர் மாவட்டம்), ஆ. முருகநாதன் (திருப்பூர் மாவட்டம்), மணி அர்ச்சுனன் (நீலகிரி மாவட்டம்), பேராசிரியர் தி.வெ.இராசேந்திரன் (திருச்சிராப்பள்ளி மாவட்டம்), ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி (புதுக் கோட்டை மாவட்டம்), தி.அனந்தராமன் (சிவகங்கை மாவட்டம்), புலவர் தங்கராசு (தஞ்சாவூர் மாவட்டம்), வீ.இராமமூர்த்தி (திருவாரூர் மாவட்டம்), செ. செய்யது முகம்மது கலிபா சாகிப் (நாகப்பட்டினம் மாவட்டம்), ஜெகாதா (இராமநாதபுரம் மாவட்டம்), மறைந்த திருக்குறள் செம்மல் ந.மணிமொழியன் (மதுரை மாவட்டம்) சார்பாக அவரது மகள் மருத்துவர் அனுராதா கணேஷ், மா.பெரியசாமி (எ) தமிழ்ப் பெரியசாமி (திண்டுக்கல் மாவட்டம்), மறைந்த தமிழாசிரியர் ப. பாண்டியராசன் (தேனி மாவட்டம்) சார்பாக அவரது மகன் சண்முகராஜன், முனைவர் கா.இராமச்சந்திரன் (விருதுநகர் மாவட்டம்), முனைவர் கேப்டன்பா. வேலம்மாள் (திருநெல்வேலி மாவட்டம்), கா.அல்லிக்கண்ணன் (தூத்துக்குடி மாவட்டம்), முனைவர் சிவ. பத்மநாபன் (கன்னியாகுமரி மாவட்டம்) ஆகியோர் பெற்றனர்.

இவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுரை மற்றும் பொன்னாடை ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.