சென்னை:

ருத்துவக் காப்பீடு திட்டத்தில், தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும்,  அதிகபட்ச மக்களைக் கொண்டுள்ளது என்று மக்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஏற்கனவே பல ஆண்டுகளாக மருத்துவக் காப்பீடு திட்டம் செயல்பட்டு வரும் நிலையில், கடந்த ஆண்டு மத்தியஅரசும் புதிய மருத்துவக் காப்பீடு திட்டங்களை அமல்படுத்தியது.

இதுதொடர்பாக  மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய சுகாராத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்,  தமிழகத்தில் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் மத்திய அரசின் 5லட்சம் ரூபாய் காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளனர் என தெரிவித்தார். ஏற்கெனவே தமிழகத்தின் அம்மா காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்யா யோஜனாவுடன் இணைந்திருப்பதாக தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மேற்கு வங்கம் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சிறுநீரக பாதிப்பு களுக்கான சிகிச்சைக்கு காப்பீட்டுத் திட்டம் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும்,

கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை 34 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஐந்தாயிரத்து 800 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருப்பதாகவும்,நாட்டில் உள்ள 11 மாநிலங்கள் தங்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு திட்டத்துடன் இணைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.