சென்னை: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் 393 ஆசிரியர்களுக்கு இராதாகிருஷ்ணன் விருதை  தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. அதன் முழு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 05 ஆம் தேதி தேசிய ஆசிரியர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 05 ஆம் தேதி தேசிய ஆசிரியர்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு  தமிழ்நாடு அரசு சார்பில் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டிற்கான இராதாகிருஷ்ணன் விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்படி இம்முறை 393 ஆசிரியர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் பெறும் ஆசிரியர்கள் முழு பட்டியல்:

Radhakrishnan awad2022