சென்னை :

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1127 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,05,777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,968 பேர் உயிர் இழந்து 7,84,117 பேர் குணம் அடைந்து தற்போது 9,692 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 338 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதுவரை சென்னையில் 2,21,937 பேர் பாதிக்கப்பட்டு 3,947 பேர் உயிர் இழந்து 2,14,968 பேர் குணம் அடைந்து தற்போது 3,022 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது, இங்கு இன்று 116 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 51,147 பேர் பாதிக்கப்பட்டு 634 பேர் உயிர் இழந்து 49,453 பேர் குணம் அடைந்து தற்போது 1,060 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது, இங்கு இன்று 84 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 49,188 பேர் பாதிக்கப்பட்டு 733 பேர் உயிர் இழந்து 47,931 பேர் குணம் அடைந்து தற்போது 524 பேர் சிகிச்சையில் உள்ளனர்.