ஆக்ரா: பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ததையடுத்து, தாஜ்மஹாலின் மீது இடி தாக்கியதாகக் கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நேற்றிரவு சூறைக்காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.அப்போது தாஜ்மகாலில் இடி தாக்கியது.

அதில், மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது.தாஜ்மகாலை சுற்றி பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட தடுப்புகள், மண்பாண்ட அடுக்குகளில் மேற்புரத்தில் உள்ள இரண்டு மண்குடுவைகள் சேதமடைந்துவிட்டன.

இந்த தகவலை தொல்லியல் துறை தெரிவித்து இருக்கிறது. மேலும், தாஜ்மகாலை சுற்றியுள்ள ஏராளமான மரங்கள் முறிந்து விட்டன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தாஜ்மகாலுக்கு செல்லும் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.