டெல்லி: கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. அதபோல டி20 உலக கோப்பை கிரிக்கெட் – அக்டோபர் 17ல் அமீரகத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், அந்த காலக்கட்டங்களில் கொரோனா 3வது அலை தாக்கக்கூடும்  என அஞ்சப்படுகிறது.மேலும் கொரோனா 2வது அலை  இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் தொடர்ந்து வருகிறது. இதனால், டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்ற ஐசிசிஐ திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறது.

இதுதொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நிலையில்,  அமீரகத்தில் போட்டியை நடத்துவதற்குரிய முதற்கட்ட பணிகளை ஐ.சி.சி தொடங்கிவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 14-ம் தேதி வரை 20 ஓவர் உலக கோப்பை போட்டியை அங்குள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நடத்த ஐ.சி.சி. முடிவு செய்திருப்பதாகவும், இதில் தொடக்க கட்ட சில ஆட்டங்கள் ஓமனில் நடைபெறும் எனவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்,  ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்202-ன் எஞ்சிய போட்டிகளும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை அமீரகத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.