தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் நாயகியாக வலம் வருபவர் ராஷி கண்ணா.
இதனிடையே, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளியான ‘நேக்டு’ படத்தில் நடித்திருந்த ஸ்வீட்டி ராஷி கண்ணா மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
ஸ்வீட்டி நாயகியாகும் முன்பு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.
“‘சுப்ரீம்’ படத்தின் படப்பிடிப்பின் போது அதிகாலை 3 மணிக்கு ராஷி கண்ணாவுக்கு புடவை கட்டிவிட வேண்டும் என்று என்னை அழைத்தார்கள். உடனே கிளம்பி நீண்ட தூரம் பயணித்து படப்பிடிப்புக்குச் சென்றேன்.
அப்போது நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டர், “ஏன் இந்த நேரத்தில் வந்தாய் என கேள்வி கேப்பார் .இதே போன்று பல முறை என்னை காக்கவைத்துள்ளார் ராஷி கண்ணா. இதன் மூலம் எனது சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார் ஸ்வீட்டி.

[youtube-feed feed=1]