டெல்லி:  ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர்.

நீதிபதி ஹேமந்த் குப்தா கர்நாடக அரசின் அரசாணை செல்லும் என்று கூறியதுடன், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால், நீதிபதி சுதன்ஷு துலியா கர்நாடக அரசின் அரசாணையை ரத்து செய்துள்ளார். இதனால், இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வு அல்லது 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கல்வி நிலையங்களில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவை ஆதரித்த, கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கா்நாடக கல்வி நிலையங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடா்பாக சா்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்குச் சீருடையில் மட்டுமே மாணவ, மாணவிகள் வரவேண்டும் என்று கடந்த பிப். 5-ஆம் தேதி மாநில அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கர்நடாக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் கலவரம் மூண்டது.

இதைத்தொடர்ந்து முஸ்லிம் மாணவிள் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஹிஜாப் தடை செல்லும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதி மன்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு   ஹிஜாப் அணிவது கட்டாயம் என இஸ்லாமிய சட்டத்தில் கூறப்பட வில்லை என்றதுடன்,  கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனவும் கடந்த மார்ச் 15-ம் தேதி பரபரப்பு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்திய இஸ்லாமிய தனிச் சட்ட வாரியம் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள்   உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் தொடர்ந்து 10 நாட்கள் பரபரப்பாக  நடைபெற்றது. கர்நாடக அரசு தரப்பிலும், இஸ்லாமிய மாணவிகள் தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன.  கர்நாடக அரசு தரப்பில்  மத்தியஅரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜாரகி பல்வேறு வாதங்களை முன்வைத்தார். அப்போது,  உடுப்பியில் உள்ள கல்லூரி  மாணவிகள் அனைவரும் சீருடை அணிய வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டே முடிவை எடுத்ததாவும், கல்வி நிலையங்களில், சீரூடை என்ற லிஸ்டில்,   ஹிஜாப் வராது என்பதால் அனைத்து மாணவிகளும் சீருடை அணிந்தனர்.  ஆனால்,  சில அமைப்புகளின் தூண்டுதலால், சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளனர் என்று வாதிட்டார்.  10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கில்  கடந்த மாதம் 22-ம் தேதி இறுதி  வாதங்கள் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கி உள்ளது. ஜஸ்டிஸ் ஹேமந்த் குப்தா மற்றும் ஜஸ்டிஸ் சுதன்ஷு துலியா ஆகியோர் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். நீதிபதி ஹேமந்த் குப்தா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதைத் தடை செய்தார். இந்த வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப வேண்டுமா என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் கூறினார். மறுபுறம், நீதிபதி சுதன்ஷு துலியா, ஹிஜாப் அணிவது அவர்களின் விருப்பம் என்று கூறுகிறார்.