டெல்லி:

தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு இயக்குனரை ஒரு வாரத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வக்கீல் ராதாகந்தா திரிபாதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஒரு மனுவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், அதன் தலைவர், இயக்குனர், உறுப்பினர் இல்லாமல் செயல்படமுடியாது.

இந்த பதவிகளை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் ஆணையம் ஊனமுற்று காணப்படுகிறது. நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்திருந்தார்
இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான நீதிபதிகள் ரமனா, சந்திரசுத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று விசாரித்தது.

தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பொது இயக்குனர், உறுப்பினர் பதவி கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் காலியாக இருக்கிறது. எவ்வளவு விரைந்து முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த பதவியை நிரப்ப வேண்டும்.

ஒரு வாரத்தில் இயக்குனரை நியமனம் செய்ய வேண்டும். 4 வாரங்களில் அதற்கான உறுப்பினர்களையும் நியமனம் செய்ய வேண்டும். இந்த வழக்கை விசாரித்து சில உத்தவுகளை பிறப்பித்தால் மத்திய அரசுக்கு சிரமம் ஏற்படும். அதனால் நியமனங்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது என்று கூறினர்.
இந்த ஆணையத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைவராக கொண்டு, உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் உறுப்பினரகவும், உயர்நீதிமன்ற நீதிபதி ஒரு உறுப்பினராகவும். மனித உரிமை குறித்து அறிந்த ஒருவரையும் உறுப்பிராக இருக்க வேண்டும் என்று 1993ம் ஆண்டு மனித உரிமை பாதுகாப்பு சட்டம் தெரிவிக்கிறது.