சென்னை: முகச்சிதைவு நோயால் பாதித்த சிறுமிக்கு  தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமைந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவின் பெற்றோர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்க கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

ஆவடி அருசேக உள்ள  வீராபுரத்தைச் சோ்ந்த 9வயது சிறுமி டானியா முகச்சிதைவு நோயால்  பாதிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தாா். அவர் பள்ளியில் படிக்குபோது, அவரை  பார்க்கும்  சக சிறுவர்கள், சிறுமிகள் கிண்டல் செய்வதும், அவரிடம் இருந்து ஒதுங்கிச்செல்வதுமாக இருந்ததால், கடுமையான மனஅழுத்தத்துக்கு ஆளானார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினக்கு தனது பிஞ்சு குரலில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உதவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.

இது முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அதையடுத்ருது, உடனடியாக அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து,  ல், கடந்த 17-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில், மருத்துவக் குழுவினா் டானியாவின் வீட்டுக்குச் சென்று இதுவரை வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தனா். பின்னா், சிறுமியை பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள சவீதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

தொடர்ந்து, பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தினமும் மருத்துவமனைக்குச் சென்று, சிறுமி டானியாவை சந்தித்து உடல் நலம் விசாரித்து, சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், அவா் சிறுமிக்கு முதலமைச்சா் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டாா்.

தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக சிறுமி டானியாவுக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. பல மருத்துவ நிபுணர்கள் வந்து, சிகிச்சை குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, சிறுமிக்கு நேற்று (23ந்தேதி)  வெற்றிகரமாக முக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. முன்னதாக நேற்று காலை மருத்துவமனை சென்ற அமைச்சர் சா.மு.நாசா் அறுவை சிகிச்சை செய்ய சிறுமி டானியாவை அறுவை சிகிச்சை அரங்கத்துக்கு வழி அனுப்பி வைத்தாா்.

அதைத்தொடர்ந்து, டானியாவுக்கு 10 மருத்துவ நிபுணர்கள்  கொண்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 9 மணி நேர முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இந்த அறுவை சிகிச்சை  வெற்றிகரமாக  நடைபெற்றதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.  இதையடுத்து, சிறுமி டானியா மருத்துவமனையில் சிறுமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறாா். அவா் முழுமையாக குணமடைந்த பிறகு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவாா் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மருத்துவக்குழுவினர், ‘பேரிரொம்போக் என்னும் இந்த நோய் உலகத்திலேயே இரண்டரை லட்சம் பேரில் ஒருவருக்குதான் வரும். சிறுவர்களை இந்தநோய் அதிகளவு பாதிக்காது பெரியவர்களைத்தான் பாதிக்கும். ஆனால் இந்த சிறுமிக்கு முகச்சிதைவு நோய் பாதிப்பு அதிகளவில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே அறுவை சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, சிறுமிக்கு சுமார் 10 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. குழந்தையின் தொண்டை பகுதியில் இருந்து சதையை எடுத்து அதனை  குழந்தையின் முகத்தில் பொறுத்தி தற்போது  சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தை டான்யா நலமாக இருக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக சிறுமி டான்யாவுக்கு தான் முகைச்சிதைவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

தற்போது, டானியா, குழந்தைகள் வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுமி டானியாவின் பெற்றோர்கள் கண்ணீர்மல்க செய்தியாளர்களிடம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.  ‘தனது மகளின் கோரிக்கையை ஏற்று, எனது மகளுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிகவனம் எடுத்து அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக தமிழக முதல்வருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது குழந்தை பழைய நிலைக்கு வந்துவிடுவாள் என்று நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குழந்தை பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எந்த வேலையாக இருந்தாலும் தினமும் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் ஐயா எங்களை பார்த்துவிட்டுத் தான் செல்வார். அவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். மேலும், என் குழந்தை நலமான பின்னர் அவரை காண முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேண்டும். முதல்வர் ஐயா என்னை பார்க்க வருவார்களா என குழந்தை என்னை கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் சிறுமியின் பெற்றோரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். உரிய மருத்துவ உதவிகள் அளிக்கப்படும் என்று உறுதியளித்தார் என்றும் கூறினார்.