சசிகலாவை முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவ் அரசியல் சாசனத்தை மீறுவதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டி இருக்கிறார். .

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை தொடர்ந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. இவர் டில்லியில் செய்தியாளரிடம் பேசுகையில், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை உடனடியாக முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்..

மேலும், “ ஜனநாயகம் மீறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. யாரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சட்டத்தின்படியே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

இந்த நிலையில், குடியரசு தலைவர் பிணாப் முகர்ஜியை சுவாமி சந்தித்துள்ளார். சசிகலாவுக்கு ஆதரவாகவே குடியரசு தலைவரை சுவாமி சந்திருப்பார் என்ற கருத்து நிலவுகிறது..