Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
News தமிழ் நாடு

திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் மீது பாலியல் புகார்… போக்சோ பாயுமா?

Jun 30, 2021

திருச்சி: பிரபலமான பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் பேராசிரியரை கைது செய்யுமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

தமிழ்நாட்டில் பள்ளி,கல்லூரிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.  சென்னையில், பிரபல பள்ளிகளான பத்மா சேஷாத்திரி, சுசில்ஹரி, மகிரிசி உள்பட பல பள்ளிகள் மீது புகார் கூறப்பட்டு, குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல, ராமநாதபுரம் முதுகளத்தூர் பள்ளிவாசல் பள்ளியில் மாணவிகளை வீட்டுக்கு அழைத்து பாலியல் சேட்டை செய்த ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால்,  செனாய்நகர் செயின்ட் ஜார்ஜ் பள்ளிமீதான விசவாரம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே லயோலா கல்லூரியில் பெண்ஊழியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான விவகாரத்தில் பேராசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்த தமிழ்நாடு மகளிர் ஆணையம் லயோலா கல்லூரி ரூ.64.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தர விட்டுள்ளது.

இநத் நிலையில், தற்போது திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.  தமிழ்த் துறையில் பட்டமேற்படிப்பு படித்த சில மாணவிகள், தமிழ்த் துறை தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி, 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளனர். அதில், வகுப்பறையில் மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டு இரட்டை அர்த்தம் வரும்படி கொச்சையாக பேசுவது போன்ற பல்வேறு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். உச்சகட்டமாக, சட்டையையும் பேண்ட்டையும் தளர்த்திக் கொண்டு, அவர் செய்த சேட்டைகளை பார்த்து, தலையை குனிந்து கொண்டே வகுப்பறையில் இருந்தோம். வகுப்பறையில் குறைந்தளவு மாணவிகள் இருந்தால், தன் அறைக்கு வரச்சொல்லி, கட்டாயப் படுத்துகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், வக்கீல் ஜெயந்திராணி தலைமையிலான குழுவினர், தமிழ்த்துறை தலைவர் பால் சந்திரமோகன், உதவி பேராசிரியர் நளினி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்து அதன் அறிக்கையை, கல்லூரி முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளனர். தற்போது மாணவிகளின் புகார் குறித்து போலீஸ் தரப்பிலும் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேராசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் எஸ்.ஆண்டனி ராஜராஜன் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதே கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியைக்கு  எஸ்.ஆண்டனி ராஜராஜன் பாலியல் தொந்தரவுஅளித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கு 2012-ம்ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி ஆசிரியை புகார் அளித்தார். எனினும், அந்த புகாரின் மீது கல்லூரி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பாலியல் விவகாரத்தில் பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்து உள்ளது. ஆனால், அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று திருச்சி மாவட்ட மகளிர் அணியினர் வலியுறுத்தி வருகின்றனர்.  திருச்சி பிஷப் கல்லூரி மீதான பாலியல் விவகாரத்தில் தமிழகஅரசு மேல்நடவடிக்கை எடுக்குமா?

Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LkJGbVBrVENDNFdR எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு..  OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன்

#sengottaiyan #admk #edapadipalaniswamy #tnelection2026 #tamilnadupolitics #patrikaidotcom #dmk #vijay #tamilnadupoliticalnews #kasengottaiyan #kas #ops #eps #tvk #tvkvijay #bjp  #admkalliance #ssarasan #gobichettipalayam #dindukal
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு..  OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன்

#sengottaiyan #admk #edapadipalaniswamy #tnelection2026 #tamilnadupolitics #patrikaidotcom #dmk #vijay #tamilnadupoliticalnews #kasengottaiyan #kas #ops #eps #tvk #tvkvijay #bjp  #admkalliance #ssarasan #gobichettipalayam #dindukal
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு.. OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன் #sengottaiyan
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் 

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் #thiruppugazh
சாய்பாபாவை சரண் அடைந்தால் ஏற்படும் அதிசயங்கள்? குறளார் கோபிநாதன்

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
சாய்பாபாவை சரண் அடைந்தால் ஏற்படும் அதிசயங்கள்? குறளார் கோபிநாதன் #saibaba #saibabablessings
Load More... Subscribe

Post navigation

தமிழகத்தில் குறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் பணியை ஸ்டாலின் தொடங்கி விட்டார்! கே.எஸ்.அழகிரி
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.ஜெகன்நாதன் நியமனம்!

Related Post

தமிழ் நாடு

கோவளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!!

தமிழ் நாடு

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன்! ஓபிஎஸ்…

தமிழ் நாடு

அதிமுகவில் அடுத்த விக்கெட்? அமைச்சர் முத்துசாமியுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் திடீர் சந்திப்பு….

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer