கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் மார்ச் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளன. தொற்று பரவல் குறைய தொடங்கியதால் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.

அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந் நிலையில் மேற்கு வங்கத்தில் 10, 12ம் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:  மேற்கு வங்கத்தில் நடப்பாண்டு (2020-2021) 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது.  அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர். மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நவம்பர் மத்தியில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.