ந்தன், பீகார்

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சென்ற வாகனத்தின் மீதும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீதும் மக்கள் கல்வீசி தாக்கி உள்ளனர்.

பீகார் மாநிலத்தில்   மற்றும் அரசின் திட்டப் பணிகள், கட்டமைப்பு வசதிகள் வளர்ச்சி போன்றவற்றையும், அந்த திட்டங்களின்  தற்போதைய நிலை குறித்தும் முதல்வர் நிதீஷ்குமார் ஆய்வு செய்து வருகிறார்.   இந்த ஆய்வை அவர் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி முதல் செய்து வருகிறார்.

அந்த வரிசையில் இன்று அவர் நந்தன் என்னும் கிராமத்துக்கு சென்றிருந்தார்.   அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் திடீர் என முதல்வரின் வாகனத்தின் மீதும் அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.    பாதுகாப்புப் படை வீரர்கள் இருவருக்கு கல்வீச்சில் காயம் ஏற்பட்டுள்ளது.   முதல்வர் நிதீஷ்குமார் பத்திரமாக பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த கல்வீச்சு செய்தி மாநிலத்தில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.