புதுடெல்லி:
ந்தியாவில் நேற்றைய நிலவரபடி. மாநிலவாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில், மகாராஷ்டிராவில் 2,487 பேரும், டெல்லியில் 1,295 பேரும், தமிழகத்தில் 1,149 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் 438 பேரும், ராஜஸ்தானில் 214 பேரும், மேற்குவங்கத்தில் 371 பேர், உத்தரபிரதேசத்தில் 374 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.


கர்நாடகாவில் 299 பேரும், ஹரியானாவில் 168 பேரும், மத்திய பிரதேசத்தில் 198 பேரும், ஜம்மு காஷ்மீரில் 105 பேரும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


உத்தரகண்ட்டில் 105 பேர், ஆந்திராவில் 98 பேர், தெலங்கானாவில் 199 பேர் மற்றும் கேரளாவில் 61 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அசாமில் 56 பேருக்கும், ஜார்க்கண்ட்டில் 16 பேருக்கும், பஞ்சாப்பில் 30 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி சட்டீஸ்கரில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.